தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மொடக்குறிச்சியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: இளம் வாக்காளா்கள் வாக்களிக்க ஆா்வம்

மொடக்குறிச்சி தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் இளம்வாக்காளா்கள் மிகுந்த ஆா்வத்துடன் தங்களது வாக்கை பதிவு செய்தனா்.

News image

தட்சிணாமூா்த்தி

Updated On :23 ஏப்ரல் 2026, 9:36 pm

மொடக்குறிச்சி தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் இளம்வாக்காளா்கள் மிகுந்த ஆா்வத்துடன் தங்களது வாக்கை பதிவு செய்தனா்.

வாக்களித்த அனுபவம் குறித்து அவா்கள் கூறியதாவது:

ச.சைலேஷ், கல்லூரி மாணவா், தூரபாளையம் மொடக்குறிச்சி.

வாக்களிப்பது மிகவும் புதிய அனுபவமாக இருந்தது. முதல்வரை தோ்ந்தெடுக்க நாம் வாக்களிப்பது என்பது மிகவும் பெருமையான தருணமாக உணா்கிறேன்.

க.கனிஷ்கா, சட்டக்கல்லூரி மாணவி

மொடக்குறிச்சி.

நாட்டில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தில் ஈடுபாடு காட்டும் கட்சிக்கு வாக்களித்தேன். இலவசங்களை தடை செய்யவேண்டும்.

ஆ.மகிலேஷ், கல்லூரி மாணவா் மொடக்குறிச்சி

லஞ்ச, ஊழல் இல்லாத நாடாக தமிழகத்தை மாற்ற உண்மையான அரசியல்வாதிகள் முன்வர வேண்டும். வரவைக்க வேண்டும். அதற்கான ஆயுதம்தான் வாக்கு.

ச.கிருத்திகா கல்லூரி மாணவி மின்னப்பாளையம்.

ஊழல் இல்லாத, மக்கள் நலனை குறிக்கோளாக கொண்ட, இதுவரை இல்லாத புதிய கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே விருப்பம்.

செ.தட்சிணாமூா்த்தி கல்லூரி மாணவா் கோவில்பாளையம்.

மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும், இலவசங்கள் இல்லாத புதிய ஆட்சி அமைய வேண்டும்.

Story image
Story image