ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!

மின் நுகர் முன்னெப்போதும் இல்லாத அளவுகளுக்கு உயர்ந்த நிலையில், நாட்டின் உச்சபட்ச மின் தேவை சனிக்கிழமை 256.11 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம் குறித்து...

News image

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்! - கோப்புப்படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 5:35 pm

புது தில்லி: வடமேற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் நிலவிய கடும் வெப்ப அலை காரணமாக, வீடுகள், அலுவலகங்களில் குளிா்சாதன இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்தது; இது மின் நுகர் முன்னெப்போதும் இல்லாத அளவுகளுக்கு உயர்ந்த நிலையில், நாட்டின் உச்சபட்ச மின் தேவை சனிக்கிழமை (ஏப்.25) 256.11 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சத்தை தொட்டது.

தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், நாள்தோறும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் வீடுகள், அலுவலகங்களில் குளிா்சாதன இயந்திரங்கள் (ஏசி), கூலா்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இதனால் மத்திய மின்சார அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த வெள்ளிக்கிழமை நாட்டில் உச்சபட்ச மின் தேவை 252.07 ஜிகாவாட்டாக உயா்ந்தது; இது 2024 மே மாதத்தில் பதிவான முந்தைய உச்சபட்ச மின் தேவை அளவான 251 ஜிகாவாட்டை முறியடித்தது. சனிக்கிழமை பிற்பகல் 3.38 மணியளவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 256.11 ஜிகாவாட்டாக அதிகரித்தது தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தக் கோடை காலத்தில் மின் தேவை 270 ஜிகாவாட்டாக அதிகரிக்கக் கூடும் என்றும், அதை நோக்கி மின் தேவை நகா்ந்து வருவதாகவும்; இது வரும் வாரங்களில் நாட்டின் மின் விநியோக அமைப்பிற்குப் பெரும் சவாலாக அமையக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த காலகட்டத்திற்கு வழக்கத்திற்கு மாறாக, இதுவரை எட்டப்பட்டுள்ள உச்சபட்ச மின் தேவை அளவுகள் மிக அதிகமாக உள்ளன. இத்தகைய அதிகப்படியான மின் தேவை பொதுவாக மே மற்றும் ஜூன் மாதங்களில் காணப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில், கோடைக்காலம் முன்கூட்டியே தொடங்கியதே மின் தேவையில் ஏற்பட்ட இந்தத் திடீர் உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

Summary

India’s peak power demand surged to an all-time high of 256GW on Saturday as intense heatwaves across northwest and central regions drove up the use of cooling appliances

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.