பாம்பன் ரயில் பாலத்தில் செல்லும் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது தொடர்பாக தெற்கு ரயில்வே தலைமைப் பொறியாளர் ஏ.கே. கத்பால் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் ரயில் பாலம் கடந்த 1914 ஆண்டு அமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு முதல் மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது
ராமேசுவரம் வரும் ரயில்கள் அனைத்தும் பாம்பன் ரயில் பாலத்தில் 10 முதல் 20 கி. மீ. வேகத்தில் மட்டுமே செல்லுகின்றன. இதனால் பாம்பன் ரயில் பாலத்தில் செல்லும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தொடர்ந்து தெற்கு ரயில்வே பொறியாளர்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தெற்கு ரயில்வே தலைமைப் பொறியாளர் ஏ.கே. கத்பால் வியாழக்கிழமை பாம்பன் ரயில் பாலத்தில் செல்லும் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது குறித்தும், பாலத்தின் தரம் குறித்தும் ட்ராலியில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான சிறிய ரக கப்பலில் சென்றும் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் விரைவில் ரயில்களின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குழந்தைகள் உணவில் எலி விஷம்! விற்றப் பொருள்களைத் திரும்பப் பெறும் தனியார் நிறுவனம்!
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


