பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

பட்டிமன்ற நடுவர் அறிவொளி உடல் தகனம்

உடல்நலக்குறைவால் காலமான பட்டிமன்ற நடுவர் டாக்டர் அ. அறிவொளி உடல் புதன்கிழமை திருச்சி ஓயாமரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Published On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

உடல்நலக்குறைவால் காலமான பட்டிமன்ற நடுவர் டாக்டர் அ. அறிவொளி உடல் புதன்கிழமை திருச்சி ஓயாமரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
நாகை மாவட்டம், சிக்கலைச் சேர்ந்தவர் டாக்டர் அ. அறிவொளி (80). சிறந்த தமிழறிஞரான இவர் பட்டிமன்ற நடுவராகவும், ஆன்மிக இலக்கியச் சொற்பொழிவாளராகவும் திகழ்ந்து வந்தார். திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகிலுள்ள ஹனிபா காலனியில் மனைவி, 2 மகன்கள், 2மகள்களுடன் வசித்து வந்தார்.
வயது முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அறிவொளி செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். ஹனிபா காலனியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு நாவுக்கரசர் சோ. சத்தியசீலன், பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா, பேராசிரியர் தா.கு. சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, திருவண்ணாமலை திருவள்ளுவர் கழகத்தின் கண்ணன், அருணகிரிநாதர் கழகத்தின் தனுஷ், கவிஞர் நந்தலாலா, பேராசிரியர் மாணிக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பட்டிமன்ற நடுவர் சாலமன்பாப்பையா தொலைபேசி மூலம் அறிவொளியின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.
புதன்கிழமை மாலை ஹனிபா காலனியிலுள்ள அவரது இல்லத்திலிருந்த புறப்பட்ட இறுதி ஊர்வலம் ஓயாமரி மின் மயானத்தை அடைந்தது. அங்கு அறிவொளியின் உடலுக்கு மூத்த மகன் நச்சினார்க்கினியன் இறுதிச்சடங்கு செய்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.