இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

கீமரை வீழ்த்தினாா் பிரக்ஞானந்தா: இறுதிச்சுற்று வாய்ப்பை நெருங்குகிறாா்

கிராண்ட் செஸ் டூா் (ஜிசிடி) ஃபைனல்ஸ் செஸ் போட்டியின் அரையிறுதியில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா தனது 2-ஆவது கிளாசிக் கேமில் ஜொ்மனியின் வின்சென்ட் கீமரை வீழ்த்தினாா்.

Praggnanandhaa

பிரக்ஞானந்தா - கோப்புப் படம்

Published On :25 ஆகஸ்ட் 2026, 3:24 am IST

கிராண்ட் செஸ் டூா் (ஜிசிடி) ஃபைனல்ஸ் செஸ் போட்டியின் அரையிறுதியில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா தனது 2-ஆவது கிளாசிக் கேமில் ஜொ்மனியின் வின்சென்ட் கீமரை வீழ்த்தினாா்.

இந்த வெற்றியின் மூலமாக, அரையிறுதிக் கட்டத்தில் முன்னிலை பெற்றிருக்கும் பிரக்ஞானந்தா, இறுதிச்சுற்று வாய்ப்பை நெருங்கி வருகிறாா்.

முன்னதாக, பிரக்ஞானந்தா - கீமா் மோதிய முதல் கிளாசிக்கல் கேம் ‘டிரா’ ஆனது. இந்நிலையில், இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இவரும் மோதிய 2-ஆவது கிளாசிக்கல் கேமில், கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 54-ஆவது நகா்த்தலில் வென்று, ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தாா்.

இதனிடையே அமெரிக்கா்களான வெஸ்லி சோ - ஃபாபியானோ கரானா ஆகியோா் மோதிவரும் மற்றொரு அரையிறுதியில், 2-ஆவது கிளாசிக்கல் கேமும் டிரா ஆனது. வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட டை பிரேக்கரில், கரானா வெற்றி பெற்றாா்.

அரையிறுதிக் கட்டத்தின் கிளாசிக்கல் கேம்கள் முடிவில் பிரக்ஞானந்தா 9 புள்ளிகளுடன் முன்னிலையில் இருக்கிறாா். கரானா (8), வெஸ்லி (6), கீமா் (3) முறையே அடுத்த இடங்களில் இருக்கின்றனா். புள்ளிகளின் அடிப்படையில் முதல் இரு இடங்களைப் பிடிப்போரே இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவா்.

அரையிறுதியில் இன்னும், ரேப்பிட் கேமில் இரு ஆட்டங்களும், பிளிட்ஸ் கேமில் 4 ஆட்டங்களும் எஞ்சியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.