ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காவிரி விவகாரம்: முற்றுகையில் ஈடுபட்ட 66 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாகப்பட்டினம், திருவாரூரில் மாவட்ட ஆட்சியரகம் முன்பாக திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்றத்தினர் 66 பேர்

News image
நாகை மாவட்ட ஆட்சியரகம் முன்பாக நடைபெற்ற இளைஞர் பெருமன்ற முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றவர்கள்.
Updated On :14 மே 2018, 8:19 pm

DIN

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாகப்பட்டினம், திருவாரூரில் மாவட்ட ஆட்சியரகம் முன்பாக திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்றத்தினர் 66 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும். இயற்கை வளத்தை சீரழிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற திட்டங்களை கைவிடக் கோரி இந்தப் போராட்டம் நடைபெற்றது. 
நாகை மாவட்ட ஆட்சியரகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் கே. பாஸ்கர் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எம். செல்வராசு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி வழக்குரைஞர் பாண்டியன், இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் கலந்து கொண்ட 29 பேரை நாகூர் போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநிலத் தலைவர் பெ. முருகேசு தலைமையிலும் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கே. ராஜா, மாணவர் பெருமன்ற ஒருங்கிணைப்பாளர் துரை.அருள்ராஜன் ஆகியோர் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போலீஸாரின் தடுப்புகளை மீறி உள்ளே செல்ல முயன்றனர். இதனால் போராட்டக் குழுவினருக்கும், போலீஸாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 37 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், நாகை மற்றும் திருவாரூரில் கைது செய்யப்பட்ட 66 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.