வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

காவிரி விவகாரம்: முற்றுகையில் ஈடுபட்ட 66 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாகப்பட்டினம், திருவாரூரில் மாவட்ட ஆட்சியரகம் முன்பாக திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்றத்தினர் 66 பேர்

News image

நாகை மாவட்ட ஆட்சியரகம் முன்பாக நடைபெற்ற இளைஞர் பெருமன்ற முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றவர்கள்.

Updated On :14 மே 2018, 8:19 pm

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாகப்பட்டினம், திருவாரூரில் மாவட்ட ஆட்சியரகம் முன்பாக திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்றத்தினர் 66 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும். இயற்கை வளத்தை சீரழிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற திட்டங்களை கைவிடக் கோரி இந்தப் போராட்டம் நடைபெற்றது. 
நாகை மாவட்ட ஆட்சியரகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் கே. பாஸ்கர் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எம். செல்வராசு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி வழக்குரைஞர் பாண்டியன், இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் கலந்து கொண்ட 29 பேரை நாகூர் போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநிலத் தலைவர் பெ. முருகேசு தலைமையிலும் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கே. ராஜா, மாணவர் பெருமன்ற ஒருங்கிணைப்பாளர் துரை.அருள்ராஜன் ஆகியோர் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போலீஸாரின் தடுப்புகளை மீறி உள்ளே செல்ல முயன்றனர். இதனால் போராட்டக் குழுவினருக்கும், போலீஸாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 37 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், நாகை மற்றும் திருவாரூரில் கைது செய்யப்பட்ட 66 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.