பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை நீட்டிக்க வாய்ப்பில்லை; திட்டமிட்டபடி ஜூன் 1 -ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர், சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது: நீட் தேர்வுக்கு, தமிழகத்தில் மையங்கள் அமைக்க வேண்டும் என சிபிஎஸ்இ தமிழக அரசிடம் கேட்டிருந்தால் 500 மையங்களாக இருந்தாலும், அவற்றை உடனடியாக ஏற்பாடு செய்திருப்போம். இதன் மூலம் தமிழக மாணவர்கள் சொந்த மாநிலத்திலேயே நீட் தேர்வு எழுதியிருப்பார்கள். இருப்பினும் வரும் ஆண்டுகளில் நீட் உள்ளிட்ட எந்தத் தேர்வாக இருந்தாலும் அதை தமிழகத்திலேயே எழுதுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறது. ஆனால், மத்திய அரசு தேசிய அளவில் ஒரு நுழைவுத் தேர்வை நடத்தும்போது அதை நமது மாணவர்கள் சிறப்பாக எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அரசின் செலவில் 9 இடங்களில் 3,145 மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஜூன் 1 -இல் பள்ளிகள் திறப்பு: வெயிலின் தாக்கத்தால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக கடந்த ஏப்ரல் 20 -ஆம் தேதி முதலே தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் கோடை விடுமுறையை நீட்டிக்க வாய்ப்பில்லை. திட்டமிட்டபடி ஜூன் 1-இல் பள்ளிகள் திறக்கப்படும்.
பிழையில்லா பாடநூல்கள்: வழக்கமாக புதிய பாடத்திட்டத்தின்கீழ் பாடநூல்களை வடிவமைத்து அதை வெளிக்கொண்டு வர இரண்டு ஆண்டுகள் வரை ஆகும். ஆனால் பள்ளிக் கல்வித்துறையின் திட்டமிட்ட செயல்பாடுகளால் இந்தப் பணிகள் ஆறு மாதங்களில் முடிக்கப்பட்டுள்ளது. இதுவரை புதிய பாடநூல்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படாத நிலையில், அவற்றில் சில பிழைகள் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். மாணவர்களின் நலன் கருதி விரைவாக பாடத்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் ஓரிரு பிழைகள் இருந்திருக்க வாய்ப்புள்ளன. அவற்றைத் திருத்தி பிழையில்லாத புதிய பாடநூல்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றார் அமைச்சர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆம் ஆத்மி எம்.பி. தொடா்புடைய கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை திடீா் சோதனை: அரவிந்த் கேஜரிவால் கண்டனம்

சேலம் வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு

தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டை ஆபத்து சூழ்ந்துள்ளது: சேலத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேச்சு

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தமிழகம் முழுவதும் பயிற்சி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


