புதிய பாடத்திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட 1, 6, 9 வகுப்புகளுக்கான பாடநூல்களின் ஆன்லைன் விற்பனை வியாழக்கிழமை தொடங்கியுள்ளது.
பிளஸ்-1 வகுப்புகளுக்கான பாடநூல்கள் விற்பனை ஜூன் மாதம் இரண்டாவது வாரம் முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:-
பள்ளிக் கல்வித் துறை அரசாணையின்படி 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி-பயிற்சி நிறுவனம் மூலம் மாற்றியமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பல்வேறு செயல்பாடுகளைத் தொடர்ந்து முதல் கட்டமாக 1, 6, 9, பிளஸ் 1 வகுப்புகளுக்கான புதிய பாடநூல்கள் தரமான முறையில் அச்சிடப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து 1, 6, 9, பிளஸ்-1 ஆகிய வகுப்புகளுக்குரிய விலையில்லா பாடநூல்கள், பள்ளி திறக்கும் அன்றே மாணவர்களுக்கு வழங்க ஏதுவாக அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதில் 1, 6, 9 ஆகிய வகுப்புகளுக்கான பாடநூல்களின் விற்பனை வியாழக்கிழமை முதல் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனத்தின் இணையதளம் (www.textbookcorp.in) மூலம் ஆன்லைனில் தொடங்கியுள்ளது.
பிளஸ் 1 வகுப்புகளுக்கான பாடநூல்கள் ஜூன் இரண்டாவது வாரத்தில் விற்பனை தொடங்கப்படவுள்ளது. புதிய பாடத்திட்ட நூல்கள் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அச்சடிக்கப்பட்டுள்ளதால் அதற்கேற்றவாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தில் வடிவமைக்கப்பட்ட 1, 6, 9 வகுப்புகளுக்கான பாடநூல்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கவுன்டரில் வெள்ளிக்கிழமை முதல் கிடைக்கும்.
மேலும் பிளஸ் 2 பாடநூல்கள் விற்பனைக்காக டிபிஐ வளாகத்தில் சிறப்பு கவுன்ட்டர் அமைக்கப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசுமுறை பயணத்தில் விதிமீறல்! அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு எதிராக மத்திய அரசு நோட்டீஸ்!

இளைஞா் கொலை வழக்கு: தாய், மகனுக்கு ஆயுள்

பாமக கொடியேற்று விழா

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ராணிப்பேட்டை ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



