வேலூர் கோட்டையில் குப்பை, சாணம் கொட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கியும், 3 குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன.
வேலூர் கோட்டை 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். 1806-ஆம் ஆண்டில் இக்கோட்டையில் தொடங்கிய சிப்பாய்ப் புரட்சிதான், நாட்டின் முதல் சுதந்திரப் போராட்டமாகும்.
136 ஏக்கர் பரப்பளவு கொண்ட வேலூர் கோட்டையில், ஜலகண்டேஸ்வரர் கோயில், திப்பு மஹால், ஐதர் மஹால், பாஷா மஹால், பேகம் மஹால், கண்டி மஹால் உள்ளிட்ட 7 மஹால்கள் அமைந்துள்ளன. கோட்டையைச் சுற்றி அகழியும், நீண்ட மதில்களும் உள்ளன.
இந்நிலையில், கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் அருகே உள்ள கோசாலை தென்னந்தோப்பில் குப்பை, சாணம் கொட்டுவதற்காக ஊழியர்கள் அருகருகே 3 பள்ளங்களை வியாழக்கிழமை தோண்டினர். அப்போது, தோண்டப்பட்ட பள்ளத்தில் ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கியும், 3 குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து, உடனடியாக தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொல்லியல் துறை அதிகாரிகள் விரைந்து வந்து பள்ளத்திலிருந்து பீரங்கி மற்றும் 3 குண்டுகளை மீட்டதுடன், தொடர்ந்து அவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.
ஏற்கெனவே, கோட்டை வளாகத்திலுள்ள அருங்காட்சியகத்தில் 2 பீரங்கிகள் உள்ளன. தற்போது கண்டெடுக்கப்பட்ட பீரங்கி சிப்பாய்ப் புரட்சியின்போது பயன்படுத்தப்பட்டவையாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரவு, பகலாக சுத்தம் செய்யும் பணி! ஜந்தர் மந்தரில் 60 டன் குப்பைகள்!

பிறந்த மாதத்திற்கும் உடல்நலத்திற்கும் தொடர்பு இருக்கா? | அறிவியல் ஆயிரம்

நெட்பிளிக்ஸில் முதல் இடம் பிடித்த கான் சிட்டி திரைப்படம்!

அந்த ஒருவரால் நாடு சீரழிந்தது... பதிவைப் பகிர்ந்த நடிகை ஜோதிகா!
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



