பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

வேலூர் கோட்டையில் பீரங்கி கண்டெடுப்பு

வேலூர் கோட்டையில் குப்பை, சாணம் கொட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கியும், 3 குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன. 

News image

பள்ளம் தோண்டிய போது, கண்டெடுக்கப்பட்ட பீரங்கி.

Updated On :25 மே 2018, 4:06 am IST

வேலூர் கோட்டையில் குப்பை, சாணம் கொட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கியும், 3 குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன. 
வேலூர் கோட்டை 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். 1806-ஆம் ஆண்டில் இக்கோட்டையில் தொடங்கிய சிப்பாய்ப் புரட்சிதான், நாட்டின் முதல் சுதந்திரப் போராட்டமாகும். 
136 ஏக்கர் பரப்பளவு கொண்ட வேலூர் கோட்டையில், ஜலகண்டேஸ்வரர் கோயில், திப்பு மஹால், ஐதர் மஹால், பாஷா மஹால், பேகம் மஹால், கண்டி மஹால் உள்ளிட்ட 7 மஹால்கள் அமைந்துள்ளன. கோட்டையைச் சுற்றி அகழியும், நீண்ட மதில்களும் உள்ளன. 
இந்நிலையில், கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் அருகே உள்ள கோசாலை தென்னந்தோப்பில் குப்பை, சாணம் கொட்டுவதற்காக ஊழியர்கள் அருகருகே 3 பள்ளங்களை வியாழக்கிழமை தோண்டினர். அப்போது, தோண்டப்பட்ட பள்ளத்தில் ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கியும், 3 குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன. 
இதுகுறித்து, உடனடியாக தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொல்லியல் துறை அதிகாரிகள் விரைந்து வந்து பள்ளத்திலிருந்து பீரங்கி மற்றும் 3 குண்டுகளை மீட்டதுடன், தொடர்ந்து அவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.
ஏற்கெனவே, கோட்டை வளாகத்திலுள்ள அருங்காட்சியகத்தில் 2 பீரங்கிகள் உள்ளன. தற்போது கண்டெடுக்கப்பட்ட பீரங்கி சிப்பாய்ப் புரட்சியின்போது பயன்படுத்தப்பட்டவையாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.