பாம்பன், தூத்துக்குடி மற்றும் நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு 

இந்தியாவின் மேற்கு-தென்மேற்கு கடல் பகுதியில் புயல் உருவாகி உள்ளதன் காரணமாக தமிழகத்தில் கடலூர், பாம்பன், தூத்துக்குடி மற்றும் நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு... 
பாம்பன், தூத்துக்குடி மற்றும் நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு 
Published on
Updated on
1 min read

சென்னை: இந்தியாவின் மேற்கு-தென்மேற்கு கடல் பகுதியில் புயல் உருவாகி உள்ளதன் காரணமாக தமிழகத்தில் கடலூர், பாம்பன், தூத்துக்குடி மற்றும் நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

மியான்மர் அருகே மேற்கு-தென்மேற்கு கடல் பகுதியில் புயல் உருவாகி உள்ளது.  இது மெதுவாக நகர்ந்து இன்றிரவு கரையை கடக்க உள்ளது.  இதனால் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும்.  இந்த புயலால் மியான்மர் கடலோர பகுதிகளில் பலத்த காற்று மற்றும்  கனமழை பெய்வதற்கான சாத்தியம் உள்ள நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதேபோன்று கேரள மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் நாளை கனமழை பெய்ய கூடும் என்றும் வானிலை ஆய்வு மைய தகவல் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் தமிழகத்தில் கடலூர், பாம்பன், தூத்துக்குடி மற்றும் நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது..

இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com