மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

இளைஞர்கள் முதலாளிகளாக மாறி வருகின்றனர்: தமிழிசை பெருமிதம்

பாஜக ஆட்சியில் படித்த இளைஞர்களை முதலாளிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறோம் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

Updated On :6 நவம்பர் 2018, 1:29 am IST


பாஜக ஆட்சியில் படித்த இளைஞர்களை முதலாளிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறோம் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னையில் அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டி: 
பாஜக ஆட்சியில் படித்த இளைஞர்களை முதலாளிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். தொழிற்சாலைகளை அமைப்பதற்கு ரூ.1 கோடி வரை ஒரு மணி நேரத்தில் கடன் அளிக்கும் மிகப்பெரிய திட்டத்தை மோடி கொண்டு வந்துள்ளார்.
ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக பாஜக கூறியது. அந்தப் பணம் எங்கே? என காங்கிரஸார் கேட்கின்றனர். அவர்கள் முதலில் ஒழுங்காகக் கணக்கு கொடுக்கவில்லை. பிரதமர் மோடி கூறியது போன்று, ராகுல் காந்தியோ, ப.சிதம்பரமோ, லாலுபிரசாத் யாதவோ மக்களைக் காப்பற்றுவதற்காக கூட்டணி அமைக்கவில்லை. தம் மக்களைக் காப்பதற்காகத்தான் கூட்டணி அமைத்துள்ளனர்.
ஏற்கெனவே பல நல்ல திட்டங்கள் அடிதட்டு மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. தீபாவளி பரிசாகக்கூட பல நல்ல திட்டங்களை மோடி அறிவிக்க உள்ளார். பாஜகவின் ஆட்சி சாதாரண மக்களுக்கானது. பெரிய முதலாளிகளுக்காக இந்த ஆட்சி நடைபெறவில்லை என்றார் தமிழிசை சௌந்தரராஜன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.