திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கஜா பாதித்த பகுதிகளில் மூன்று நாட்களில் முழுமையாக மின் இணைப்பு: அமைச்சர் தங்கமணி 

கஜா புயலினால் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் மூன்று நாட்களில் முழுமையாக மின் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும்  என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :18 நவம்பர் 2018, 1:03 pm

DIN

புதுக்கோட்டை: கஜா புயலினால் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் மூன்று நாட்களில் முழுமையாக மின் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும்  என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் டெல்டா மாவட்டங்களைத் தாக்கிய 'கஜா' புயலின் காரணமாக கடுமையான பாதிப்பு ஏறட்டுள்ளது. இருபதுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதுடன், பல்லாயிரம் மரங்கள் சாய்ந்துள்ளன. தற்போது மாநிலத்தின் பெரும்பாமையான பகுதிகளில் முழுமையான அளவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் கஜா புயலினால் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் மூன்று நாட்களில் முழுமையாக மின் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும்  என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டையில் ஞாயிறன்று செய்தியாளர்களை சந்தித்த பிறகு அவர் கூறியதாவது:

கஜா புயல் பாதித்த பகுதிகளில் உள்ள நகர்பகுதிகளுக்கு இன்னும் இரண்டு தினங்களிலும், கிராமப்புறங்களுக்கு மூன்று அல்லது நான்கு தினங்களில் மின் இணைப்பு வழங்கப்படும்.
நிவாரணப்பணிக்கு கூடுதலாக ஆந்திராவில் இருந்து 1,000 பணியாளர்கள் நாளை வருகின்றனர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஞாயிறு மாலைக்குள் மின் இணைப்பு கொடுக்கப்படும். நகர் முழுவதும் முழுமையாக 5 நாட்களில் மின் இணைப்பு வழங்கப்படும்

அதேபோல புயல் பாதித்த அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக மூன்று  நாட்களில் மின் இணைப்பு கொடுக்க போர்க்கால அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மின்சீரமைப்பு பணிக்கு மின்கம்பங்களும், கூடுதல் மின்மாற்றிகளும் கைவசம் இருக்கின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.