சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

புயல் பாதிப்பை அரசியலாக்கக் கூடாது: தமிழிசை சௌந்தரராஜன்

புயல் பாதிப்பை யாரும் அரசியலாக்கக் கூடாது எனவும், அனைத்துக் கட்சிகளும் இணைந்து களப்பணியாற்ற வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 11:10 pm IST

புயல் பாதிப்பை யாரும் அரசியலாக்கக் கூடாது எனவும், அனைத்துக் கட்சிகளும் இணைந்து களப்பணியாற்ற வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட திங்கள்கிழமை வருகை தந்த அவர், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், வேதாரண்யம் உள்ளிட்ட டெல்டா பகுதி மக்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும். புயல் பாதிப்பு சம்பவத்தை திமுக தலைவர் ஸ்டாலின் அரசியலாக்குவது கவலை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் செய்வது எதிர்ப்பு அல்ல. எதிர்பார்ப்பு. மத்திய அரசின் நிவாரணம் தமிழகத்துக்கு தேவைக்கேற்ப வழங்கப்படும்.
தொடர்ந்து நிவாரணம் கிடைக்க அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம். தமிழக அரசின் செயல்பாடுகளை கணக்கிடுவதற்கான நேரம் இது கிடையாது. பரிதவிக்கும் மக்களை பரிவோடு அணுக வேண்டும் என்றார். புயல் நிவாரணம் குறித்த நடிகர்களின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு நடப்பது அரசியல், நடிப்பது அவர்களின் தொழில் என பதில் அளித்தார்.
தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது: பின்னர், புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட  அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  புயல் மற்ற மாவட்டங்களை விடவும் அதிகமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கோரத்தாண்டம் ஆடியுள்ளது. மத்திய அரசின் உதவியுடன் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்படுகிறது. மின் வாரிய ஊழியர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்று காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றார் அவர். 
பாதிப்புகளை பார்வையிட்டார்:  விராலிமலையில் வீடுகள் மற்றும் உறவினரை இழந்து தவிக்கும் குடும்பங்களைப் பார்வையிட வந்த தமிழிசை சௌந்தரராஜன், விராலிமலை தெற்கு தெருவில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த சுதிர்குமார் மனைவி பரமேஸ்வரி (25)  வீட்டிற்குச் சென்று அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறியதோடு,  விரைவில் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.