ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயன பொருள்கள் ஒரு மாதத்துக்குள் அகற்றப்படும்: ஆட்சியர்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயன பொருள்கள் அனைத்தும் ஒரு மாதத்துக்குள் அகற்றப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.

Updated On :30 ஜனவரி 2024, 11:10 pm IST

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயன பொருள்கள் அனைத்தும் ஒரு மாதத்துக்குள் அகற்றப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது அவர் அளித்த பேட்டி:
வானிலை ஆய்வு மையம் வழங்கிய தகவலின் அடிப்படையில் மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என வலியுறுத்தியிருந்தோம். ஆனால், சிலர் விதிமுறையை மீறி கடலுக்குச் சென்றுள்ளனர்.
தஞ்சாவூர், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகிறது. சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளில் 29 வீடுகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. 
அந்த வீடுகளை மற்ற பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஜிப்சம், ராக் பாஸ்பேட் உள்ளிட்ட ரசாயன பொருள்கள் 95 சதவீதம் அகற்றப்பட்டுள்ளது. ஆலையில் இருந்து தாமிர தாது உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் இன்னும் ஒரு மாத காலத்தில் முழுமையாக அகற்றப்படும்.
இலங்கை சிறையில் உள்ள தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த 8 மீனவர்களை மீட்க தமிழக அரசு மற்றும்  மீன்வளத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.