புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து நீரை எடுக்க ஸ்டெர்லைட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தடை 

ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து நீரை எடுக்க ஸ்டெர்லைட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :29 நவம்பர் 2018, 9:19 am

DIN

புது தில்லி: ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து நீரை எடுக்க ஸ்டெர்லைட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து அங்கு அமைந்துள்ள சிப்காட்டில் உள்ள நிறுவனங்கள் வணிக நோக்கத்தின் பொருட்டு அதிக அளவு நீரை எடுக்கின்றன. எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞரான ஜோயல் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். 

இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து நீரை எடுக்க ஸ்டெர்லைட் உள்ளிட்ட சிப்காட் நிறுவனங்களுக்கு தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

ஜோயல் தொடந்துள்ள வழக்கில் இந்த தீர்ப்பினை அளித்துள்ள பசுமைத் தீர்ப்பாயம், குடிநீருக்காக நீரை எடுப்பதறகு தடையில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.