இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

உரிமையியல் நீதிபதி பணியிடங்கள்: மதிப்பெண் பட்டியல் வெளியீடு

உரிமையியல் நீதிபதி பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது.

Updated On :9 அக்டோபர் 2018, 1:48 am IST


உரிமையியல் நீதிபதி பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி. திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
மாநில நீதிப் பணியில் 320 உரிமையியல் நீதிபதி பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்ய முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த ஜூனிலும், முதன்மை எழுத்துத் தேர்வு ஆகஸ்ட்டிலும் நடத்தப்பட்டன. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் கடந்த செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5 -ஆம் தேதி வரை நடைபெற்ற நேர்காணலில் பங்கேற்றனர். இதையடுத்து, இதற்கான ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in)  வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை நடந்த உரிமையியல் நீதிபதி பதவிக்கான தேர்வுகளில், மிகக் குறுகிய காலத்தில், அதாவது 5 மாதங்கள் 26 நாள்களில் இந்தத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது 
என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.