நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

கம்பெனிகள் வருமான வரிக் கணக்கு தாக்கல்: காலக்கெடு அக்.31 வரை நீட்டிப்பு

தமிழகம் உள்பட நாடு முழுவதும் தணிக்கை தேவைப்படும் கம்பெனிகள் தங்களது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் காலக்கெடுவை வரும் அக்டோபர் 31-ஆம் தேதி வரை

Updated On :9 அக்டோபர் 2018, 1:48 am IST


தமிழகம் உள்பட நாடு முழுவதும் தணிக்கை தேவைப்படும் கம்பெனிகள் தங்களது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் காலக்கெடுவை வரும் அக்டோபர் 31-ஆம் தேதி வரை வருமான வரித் துறை நீட்டித்துள்ளது.
தணிக்கை தேவைப்படும் கம்பெனிகள் 2017-18-ஆம் நிதியாண்டுக்கான (மதிப்பீட்டு ஆண்டு 2018-19) வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய, செப்டம்பர் 30 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இந்த அவகாசம் அக்டோபர் 15 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்தக் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினர் மீண்டும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.