உரிமையியல் நீதிபதி பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி. திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
மாநில நீதிப் பணியில் 320 உரிமையியல் நீதிபதி பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்ய முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த ஜூனிலும், முதன்மை எழுத்துத் தேர்வு ஆகஸ்ட்டிலும் நடத்தப்பட்டன. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் கடந்த செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5 -ஆம் தேதி வரை நடைபெற்ற நேர்காணலில் பங்கேற்றனர். இதையடுத்து, இதற்கான ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை நடந்த உரிமையியல் நீதிபதி பதவிக்கான தேர்வுகளில், மிகக் குறுகிய காலத்தில், அதாவது 5 மாதங்கள் 26 நாள்களில் இந்தத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரஷிய எரிசக்தி மையங்கள் மீது உக்ரைன் தாக்குதல்!

ஆர்சிபி வெற்றிக்காக யாக சாலை பூஜை நடத்திய ரசிகர்கள்!

திருவள்ளுவருக்கு காவி உடை; ஆளுநரின் அராஜகமான செயலாகும்: வைகோ கண்டனம்

சாய் அபயங்கர், ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணுவுக்கு கார் பரிசளித்த சூர்யா!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


