சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

கும்பக்கரை அருவியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவிக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் 24 ஆவது நாளாக திங்கள்கிழமையும் தடை நீடித்தது.

News image

நீர்வரத்து அதிகரித்த நிலையில் காணப்படும் கும்பக்கரை அருவி

Updated On :22 அக்டோபர் 2018, 7:58 pm


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவிக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் 24 ஆவது நாளாக திங்கள்கிழமையும் தடை நீடித்தது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் நல்ல மழை பெய்து நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த செப். 29- ஆம் தேதி முதல் கும்பக்கரை அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். கடந்த 20 நாள்களுக்கு மேலாக நல்ல மழை பெய்து வருவதால் அருவிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை 24 ஆவது நாளாக அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். 
சோத்துப்பாறை அணை முழு கொள்ளவை எட்டியுள்ளதால் கும்பக்கரை அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சோத்துப்பாறை அணையைப் பார்வையிட்டு செல்கின்றனர். 
இது குறித்து தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் சுரேஷ் தெரிவித்தது: கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருதி அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சீரான நீர்வரத்து ஏற்படும் வரை அணைக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை நீடிக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.