தமிழக பள்ளிளில் காலியாக உள்ள சிறப்பாசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகப் பள்ளிகளில் ஓவியம், தையல், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கு 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வை நடத்தியது. தேர்வு முடிவின் அடிப்படையில் ஓவிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஒரு பணியிடத்துக்கு 2 பேர் என்ற முறையில் 2,784 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் கல்வித் தகுதி இல்லாமல் போலியாக விண்ணப்பித்தவர்கள் எனத் தெரிய வந்தது.
இவற்றைக் கருத்தில் கொண்டு, 6 ஆண்டுகளாக நிரப்பப்படாத சிறப்பாசிரியர் பணியிடங்களை வெளிப்படைத்தன்மையுடனும், குளறுபடிகளுக்கு இடம் இல்லாத வகையிலும், தகுதி உள்ளவர்களை மட்டுமே கொண்டு நிரப்ப வேண்டும் என்று வாசன் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புத்த பூா்ணிமா: குடியரசு துணைத் தலைவா், உள்துறை அமைச்சா் வாழ்த்து!

திருச்சானூா் வருடாந்திர வசந்தோற்சவம் 2-ஆம் நாள்: தங்கத்தேரில் பத்மாவதி தாயாா் புறப்பாடு!
போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை: 23 போ் கைது
அமலாக்கத்துறைக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் அளித்தது ஏன்? மத்திய அமைச்சா் விளக்கம்!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

