/

செஞ்சிலுவை சங்கத்துக்கு புதிய துணைத் தலைவர் நியமனம் 

இந்திய செஞ்சிலுவை சங்க தமிழகக் கிளையின் துணைத் தலைவராக எஸ்.ஜி.பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திங்கள்கிழமை அளித்தார்.

News image
Updated On :3 செப்டம்பர் 2018, 8:54 pm


இந்திய செஞ்சிலுவை சங்க தமிழகக் கிளையின் துணைத் தலைவராக எஸ்.ஜி.பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திங்கள்கிழமை அளித்தார்.
சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று தங்கப் பதக்கம் பெற்ற பிரபாகரன், வங்கி நிர்வாகத்திலும் மிகுந்த அனுபவம் பெற்றவர். 
இந்தியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் அரசு நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளவர். பல்வேறு நிறுவனங்களில் இயக்குநர் குழு உறுப்பினராகச் செயல்பட்டுள்ளார் என்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.