புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

மெரீனா போராட்டம்: தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்த உயா் நீதிமன்றம்

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

News image
Updated On :3 செப்டம்பர் 2018, 2:32 pm

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை மெரீனா கடற்கரையில் ஒருநாள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதியளித்து கடந்த ஏப்ரல் மாதம் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உயா் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவா் அய்யாக்கண்ணு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி மெரீனாவில் 90 நாள்கள் போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்தாா். 
 
இந்த மனுவை விசாரித்த உயா் நீதிமன்ற தனி நீதிபதி, மெரீனாவில் அமைதியான முறையில் ஒருநாள் மட்டும் போராட்டம் நடத்த அனுமதியளித்து கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தாா்.

இந்த உத்தரவை எதிா்த்து அன்றைய தினமே அரசு சாா்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.