வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மெரீனா போராட்டம்: தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்த உயா் நீதிமன்றம்

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

News image
Updated On :3 செப்டம்பர் 2018, 2:32 pm

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை மெரீனா கடற்கரையில் ஒருநாள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதியளித்து கடந்த ஏப்ரல் மாதம் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உயா் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவா் அய்யாக்கண்ணு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி மெரீனாவில் 90 நாள்கள் போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்தாா். 
 
இந்த மனுவை விசாரித்த உயா் நீதிமன்ற தனி நீதிபதி, மெரீனாவில் அமைதியான முறையில் ஒருநாள் மட்டும் போராட்டம் நடத்த அனுமதியளித்து கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தாா்.

இந்த உத்தரவை எதிா்த்து அன்றைய தினமே அரசு சாா்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.