தமிழகத்தில் குடிமராமத்துப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக மாநில ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
சென்னையிலிருந்து திங்கள்கிழமை விமானம் மூலம் மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகம் முழுவதும் குடிமராமத்துப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இது விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் பாராட்டைப் பெற்றது.
அரசின் திட்டங்கள் நேரடியாக மக்களுக்குச் சென்றடைகின்றன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எளிமையானவராக யாரும் சந்திக்ககூடியவராக உள்ளார்.
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுகவின் கோட்டை. திருப்பரங்குன்றத்தில் அதிமுகவே வெற்றிபெறும்.
காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு பல பகுதிகளுக்கு சென்றடைகிறது. ஒருசில இடங்களில் போதிய மழை இல்லாததாலும், நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துவிட்டதாலும் அங்கு தண்ணீர் செல்ல தாமதமாகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னல் பாய்ந்ததில் 2 விவசாயிகள் உயிரிழப்பு

காணாமல்போன 194 பேரை மீட்டு குடும்பத்தினருடன் சோ்த்துவைப்பு தில்லி காவல்துறை நடவடிக்கை

தெலங்கானாவில் மருந்து ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் பலி, 8 பேர் காயம்

ராயல் என்ஃபீல்டு விற்பனை 31 சதவீதம் அதிகரிப்பு!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


