மறைந்த முதல்வா் ஜெயலலிதாவுக்கு மெரீனா கடற்கரையில் நினைவிடம் அமைப்பதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை வரும் செப்டம்பா் 18-ஆம் தேதிக்கு உயா் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் கட்சி தலைவா் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு மெரீனா கடற்கரையில் உள்ள அவரது சமாதியில் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் அமைக்கக்கூடாது. நினைவிடம் அமைத்தால் அது தவறான முன் உதாரணமாகிவிடும். எனவே மெரீனாவில் நினைவிடம் கட்ட அனுமதிக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் கே.கல்யாணசுந்தரம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை வரும் செப்டம்பா் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி!

கடலூர் அருகே ரௌடி கொலை: போலீஸார் விசாரணை

பெட்ரோல், டீசல் விலையும் விரைவில் உயர்கிறதா?

ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


