சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

பூண்டி ஏரியில் செத்து மிதந்த மீன்கள் அகற்றம்

பூண்டி ஏரியில் செத்துமிதந்து துர்நாற்றம் ஏற்படுத்திய மீன்களை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறையினர் திங்கள்கிழமை ஈடுபட்டனர். 

News image

பூண்டி ஏரியில் இறந்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில்  ஈடுபட்டவர்கள்.

Updated On :3 செப்டம்பர் 2018, 9:16 pm


பூண்டி ஏரியில் செத்துமிதந்து துர்நாற்றம் ஏற்படுத்திய மீன்களை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறையினர் திங்கள்கிழமை ஈடுபட்டனர். 
திருவள்ளூர் அருகே பூண்டி ஏரியில் தண்ணீர் இருப்பு 13 மில்லியன் கன அடியாக குறைந்து கொண்டே வருகிறது. இதனால், சேறும் சகதியுமாக இருப்பதால் மீன்களின் செவுளுக்குள் சேறு புகுந்து சுவாசிக்க முடியாத நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஏரி முழுவதும் மீன்கள் செத்து மிதந்தன. இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் துர்நாற்றத்தால் மிகவும் அவதியடைந்தனர்.
இதையடுத்து, ஏரியில் மிதக்கும் மீன்களை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில் தொழிலாளர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். திங்கள்கிழமை மட்டும் ஏரியில் இருந்து மொத்தம் 1,500 கிலோ மீன்கள் அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.