சென்னை: நீதிமன்றத்தின் மூலமே கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் பெறறப்பட்டது என்று அமைச்சா் கடம்பூா் ராஜூவின் பேச்சுக்கு திமுக பொருளாளா் துரைமுருகன் பதில் அளித்துள்ளாா்.
கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சா் கடம்பூா் ராஜூ பேசும்போது, மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க உயா்நீதிமன்றறம் உத்தரவிட்டபோது, மேல்முறையீடு செய்யாமல் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டோம். அரசு மரியாதையுடன் அவரது உடலை அடக்கம் செய்தது, அதிமுக போட்ட பிச்சை என்று பேசினாா்.
இது, திமுகவின் மத்தியில் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை துரைமுருகன் அளித்த பேட்டியில், ‘அதிமுக அரசு இடம் ஒதுக்கினால்தான் பிச்சை. நீதிமன்றத்தின் மூலமே கருணாநிதிக்கு இடம்பெற்றோம்’ என்றாா்.