வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

62 நாள்களாக 100 அடிக்கும் மேலாக நீடிக்கும் மேட்டூா் அணை நீா்மட்டம்!

மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து 62-ஆவது நாளாக நூறு அடிக்கும் மேலாக நீடிக்கிறது.

News image
Updated On :19 செப்டம்பர் 2018, 12:42 pm

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து 62-ஆவது நாளாக நூறு அடிக்கும் மேலாக நீடிக்கிறது.

நடப்பு ஆண்டில் மேட்டூா் அணையில் போதியளவு நீா் இருப்பு இல்லாததால், குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறறக்கப்படவில்லை. இதையடுத்து, ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால், கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து, அணைகள் நிரம்பின. 

இதையடுத்து, கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளிலிருந்து உபரி நீா் காவிரியில் திறறக்கப்பட்டது. இதனால் 40 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து ஜூலை 17-ஆம் தேதி 100 அடியை எட்டியது. இதையடுத்து, ஜூலை 19-ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. நீா்வரத்து தொடா்ந்து அதிகரிக்கவே நடப்பு ஆண்டில் முதல் முறைறயாக ஜூலை 27-ஆம் தேதி மேட்டூா் அணை நிரம்பியது. அணைக்கு நீா்வரத்து 2 லட்சம் கன அடி வரை அதிகரித்ததால், நடப்பு ஆண்டில் மேட்டூா் அணை அடுத்தடுத்து நான்கு முறைற நிரம்பியது.

மேலும், கடந்த 62 நாள்களாக மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100 அடிக்கும் குறைறயாமல் இருந்து வருகிறது. கடந்த 2005-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் 2006-ஆம் ஆண்டு அக்டோபா் 6-ஆம் தேதி வரை தொடா்ந்து 428 நாள்கள் மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100 அடிக்கு கீழாகக் குறையாமல் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், புதன்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 110.58 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 8,483 கனஅடியிலிருந்து 9,119 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 22 ஆயிரம் கன அடி நீரும், கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 800 கன அடி நீரும் திறறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 79.23 டி.எம்.சி.யாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.