அண்மையில் மத்திய நிதி நிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அன்றைய தினம் தம்பிதுரை என்ன பேசினார் என்றால், இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் பெரிய சலுகைகள் இல்லை, இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையானது, பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை என்று அறிவித்திருக்கிறார்கள், அதே போதுமானதல்ல. குறைந்தபட்சம் 12,000 ரூபாய் வழங்கிட வேண்டும். தற்போது அறிவித்திருக்கக்கூடிய சலுகைகளை நியாயமாக, ஏற்கனவே ஏன் 2012ஆம் ஆண்டு அறிவிக்கவில்லை என்று கேட்டவர் யார் என்றால் தம்பிதுரை. அப்படிப்பட்டவர்தான் பி.ஜே.பி-யின் துணையோடு ஆதரவோடு அவர் இங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கின்றார்.