நாகர்கோயில்: கன்னியாகுமரி அருகே பாஜக மற்றும் அமமுக தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், ஐந்து பேருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பாஜக சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் 278 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளன,.
இந்நிலையில் கன்னியாகுமரி அருகே பாஜக மற்றும் அமமுக தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், ஐந்து பேருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளது.
அம்மாவட்டத்தின் பூதப்பாண்டி அருகேயுள்ள வீரவநல்லூர் என்னும் இடத்தில வியாழன் மாலை வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில், வெளியே கூடியிருந்த பாஜக மற்றும் அமமுக தொண்டர்கள் இடையே வாய்ச்சண்டை உருவானது. விரைவில் அது கைகலப்பாக மாறியது.
இதில் அமமுகவைச் சேர்ந்தவர்கள் கத்தி மற்றும் இரும்புக்கம்பியால் பாஜக தொண்டர்களைத் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் இருவர் ஆபத்தான கட்டத்திலிருப்பதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


