'டிக் டாக்' செயலிக்கு நிபந்தனையுடன் தடையை நீக்கி உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு 

'டிக் டாக்' செயலியின் பயன்பாட்டிற்கு நிபந்தனையுடன் தடையை நீக்கி அனுமதியளித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
'டிக் டாக்' செயலிக்கு நிபந்தனையுடன் தடையை நீக்கி உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு 
Published on
Updated on
2 min read

மதுரை: 'டிக் டாக்' செயலியின் பயன்பாட்டிற்கு நிபந்தனையுடன் தடையை நீக்கி அனுமதியளித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்களில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்றாக டிக் டாக் மாறியுள்ளது. இதனால், இளைஞர்கள் தவறான வழிக்கு செல்வதாகவும், சமூகத்தில் அதிக பிரச்னைகள் ஏற்படுவதாகவும், ஆபாச விடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சமூக நலன், மக்கள் நலன் கருதி அந்த செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

இதையடுத்து, புளூ வேல் போன்ற ஆபத்தான விளையாட்டுகளை நீதிமன்றம் தலையிட்ட பின்னரே மத்திய அரசு தடை செய்தது; அதுபோல சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒவ்வொன்றுக்கும் நீதிமன்றமே தடைவிதிக்க வேண்டும் என எதிர்பார்க்காமல் அரசே முன்வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  டிக் டாக் செயலியை தடை செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து  தமிழக அரசு பதிலளிக்க  உத்தரவிட்டனர். மேலும் டிக் டாக் விடியோவை தொலைக்காட்சிகளில் வெளியிடத் தடை விதித்தும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் டிக் டாக் செயலியை தயாரித்த சீன நிறுவனமான பைட்டி டான்ஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். எனினும், மனுதாரரின் கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் கடந்த திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தடை உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையே விசாரிக்கலாம். ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் இது தொடர்பாக உயர்நீதிமன்றம் முடிவெடுக்கவில்லை என்றால், டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை தானாகவே ரத்தாகிவிடும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

முன்னதாக டிக் டாக் செயலியை 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். தங்களது தரப்பு கருத்தை கேட்காமலேயே அந்தச் செயலிக்கு தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்திருக்கக் கூடாது. எனவே, அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சிங்வி தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார்.

இந்நிலையில் 'டிக் டாக்' செயலியின் பயன்பாட்டிற்கு நிபந்தனையுடன் தடையை நீக்கி அனுமதியளித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் அளித்திருந்த கெடுவின்படி புதனன்று இந்த வழக்கு மதுரை உயர் நீதிமன்றக்  கிளையில் விசாரணைக்கு வந்தபோது, சிறுவர் சிறுமிகள் பங்குபெறும் வகையிலான விடியோக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது என்றும், சமூக சீர்கேட்டைத் தூண்டும் வகையிகலான ஆபாச விடியோக்களை அனுமதிக்க கூடாது என்னும் நிபந்தனைகளுடன் 'டிக் டாக்' செயலியின் பயன்பாட்டிற்கு அனுமதியளித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com