டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பணிமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிராக மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் நடராஜன் வழக்கு 

பணிமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிராக மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் நடராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாயன்று வழக்குத் தொடர்ந்துள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:47 am

DIN

சென்னை: பணிமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிராக மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் நடராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாயன்று வழக்குத் தொடர்ந்துள்ளார்.

மதுரையில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வட்டாட்சியர் சம்பூர்ணம் நுழைந்த விவகாரம் தொடர்பாக மதுரை மக்களவைத் தொகுதி சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையில், மதுரை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான நடராஜனை மாற்ற கோரி தேர்தல் ஆணையதுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை ஏற்று புதிய ஆட்சியராக எஸ். நாகராஜனை தேர்தல் ஆணையம் நியமித்தது. இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியராகவும் மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்ட நாகராஜன் ஞாயிறன்று பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாக இவர் பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கூடுதல் இயக்குநராக இருந்தார்.

அதேசமயம், முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன், சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் பணிமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிராக மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் நடராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாயன்று வழக்குத் தொடர்ந்துள்ளார்.

மதுரை மக்களவைத் தொகுதி சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது, நடராசன் தனது முறையீட்டை முன்வைத்தார்.

அவர் தனது மனுவில் மதுரையில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வட்டாட்சியர் சம்பூர்ணம் நுழைந்த விவகாரத்தில் தனது தரப்பு என்ன என்பது குறித்து கேட்காமலே பணியிட மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.