பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கோவையில் கடன் விவகாரம் தொடர்பாக விவசாயி ஒருவர் வங்கி முன்பு தற்கொலை

கோவை அருகேயுள்ள சங்ககிரியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கடன் விவகாரம் தொடர்பாக கோவையில் உள்ள இந்தியன் வங்கி முன்பாக தற்கொலை செய்து கொண்டார்.

Published On :

கோவை: கோவை அருகேயுள்ள சங்ககிரியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கடன் விவகாரம் தொடர்பாக கோவையில் உள்ள இந்தியன் வங்கி முன்பாக தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள கொங்கணாபுரத்தைச் சேர்ந்தவர் பூபதி. விவசாயியான இவர் நண்பர்கள் மூவருடன் சேர்ந்து பால்பண்ணை அமைப்பதற்காக கடந்த 2015-ஆம் ஆண்டு, கோவை வெரைட்டி ஹால் சாலையில் உள்ள இந்தியன் வங்கியில் கடன் பெற்றார்.

ஆனால் தற்போது இந்த கடன் தொடர்பாக பூபதியிடம் பேசிய வாங்கி அதிகாரிகள் நண்பர்கள் இருவரின் கடனையும் பூபதியே செலுத்த வேண்டும் என்று கூறி அழுத்தம் குடுத்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாக பூபதி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் கோவையில் உள்ள இந்தியன் வங்கி முன்பாக வியாழனன்று பூபதி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தற்போது அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கா கொண்டு செல்லப்பட்டுள்ளது.

போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.