தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

கோவையில் கடன் விவகாரம் தொடர்பாக விவசாயி ஒருவர் வங்கி முன்பு தற்கொலை

கோவை அருகேயுள்ள சங்ககிரியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கடன் விவகாரம் தொடர்பாக கோவையில் உள்ள இந்தியன் வங்கி முன்பாக தற்கொலை செய்து கொண்டார்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2019, 11:41 am

கோவை: கோவை அருகேயுள்ள சங்ககிரியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கடன் விவகாரம் தொடர்பாக கோவையில் உள்ள இந்தியன் வங்கி முன்பாக தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள கொங்கணாபுரத்தைச் சேர்ந்தவர் பூபதி. விவசாயியான இவர் நண்பர்கள் மூவருடன் சேர்ந்து பால்பண்ணை அமைப்பதற்காக கடந்த 2015-ஆம் ஆண்டு, கோவை வெரைட்டி ஹால் சாலையில் உள்ள இந்தியன் வங்கியில் கடன் பெற்றார்.

ஆனால் தற்போது இந்த கடன் தொடர்பாக பூபதியிடம் பேசிய வாங்கி அதிகாரிகள் நண்பர்கள் இருவரின் கடனையும் பூபதியே செலுத்த வேண்டும் என்று கூறி அழுத்தம் குடுத்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாக பூபதி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் கோவையில் உள்ள இந்தியன் வங்கி முன்பாக வியாழனன்று பூபதி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தற்போது அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கா கொண்டு செல்லப்பட்டுள்ளது.

போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.