திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

காஷ்மீர் விவகாரத்தில் திமுக நிலைப்பாட்டை மேற்கோள் காட்டும் பாகிஸ்தான் ரேடியோ!

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை எதிர்த்து திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் தில்லியில் போராட்டம் நடத்தப் போவதாக நேற்று அறிவித்தது.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2019, 8:52 am

DIN


காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை எதிர்த்து திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் தில்லியில் போராட்டம் நடத்தப் போவதாக நேற்று அறிவித்தது.

திமுகவின் அறிவிப்பினை, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக  கருத்துக் கூறி வரும் பாகிஸ்தானின் அரசு வானொலியும் செய்தி வெளியிட்டுள்ளது.

அதாவது, இந்தியாவில் நடந்து முடிந்த 2019 பொதுத் தேர்தலில் மூன்றாவது பெரும் கட்சியாக வெற்றி பெற்ற திமுக, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து பிரதமர் நரேந்திர மோடி அரசு எடுத்திருக்கும் முடிவுக்கு எதிராக தில்லியில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது என்று செய்தி வெளியிட்டு, அது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் டிவீட் செய்துள்ளது.

இதற்கு தனது கருத்தை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, திமுக குரல் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதாகக் கூறும் ஸ்டாலின் குரல் இன்று பாகிஸ்தான் ரேடியோவில் ஒலிக்கிறது. திமுகவின் தேசத்துரோகத்தின் உச்ச கட்டம்.
@mkstalin voice in support of special status for J&K in pak radio?nation understands true colour of DMK என்று தமிழிசை பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.