தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதல்வர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து 

ஞாயிறன்று பிறந்தநாள் கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

News image
Updated On :25 ஆகஸ்ட் 2019, 3:59 pm IST

சென்னை: ஞாயிறன்று பிறந்தநாள் கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

தேமுதிக தலைவரான விஜயகாந்த் ஞாயிறன்று தனது 67வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் பள்ளிக்குழந்தைகள் விஜயகாந்திற்கு இனிப்பு ஊட்டி விட்டனர்.

இந்நிலையில் ஞாயிறன்று பிறந்தநாள் கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

பூங்கொத்துடன் அவர் அனுப்பியுள்ள பிறந்தநாள் வாழ்த்து கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:

கலை ஆர்வம் மிக்கவராய் திரையுலகில் தனி முத்திரை பதித்தவர் நீங்கள். அரசியல், பொது வாழ்வில் சிறப்பாக பணியாற்றி வருகிறீர்கள். நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியத்துடன் தொடர்ந்து மக்கள் பணியாற்ற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.