இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'டலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 291 லாட்டரி வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிதம்பரத்தில் 104, கடலூர் 98, நெய்வேலி 27, சேத்தியாத்தோப்பு 25, பண்ருட்டி 20, விருத்தாசலம் 9, திட்டக்குடி 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ரூ.3.91 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், லாட்டரி சீட்டு விற்பனை சம்பந்தமாக பொதுமக்கள் 90873 00100 என்ற செல்லிடப்பேசி எண்ணில் வாட்ஸ்-அப் மூலமாக தகவல் தெரிவிக்கலாம்' என்று தகவல் தெரிவித்துள்ளார்.