அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

குடியுரிமைத் திருத்தச் சட்டம்: நெல்லையில் காங்கிரஸார் உண்ணாவிரதம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

News image
Updated On :23 டிசம்பர் 2019, 6:21 am

DIN

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்டத் தலைவர் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தார்.

முன்னாள் மத்திய இணையமைச்சர் ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் தொடங்கி வைத்து பேசுகையில், 'இந்தியா முழுவதும் விலைவாசி கடுமையாக உயர்ந்து, பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதைப்பற்றியெல்லாம் சிறிதும் கவலைகொள்ளாத மத்திய அரசு, மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அவசரகதியில் அமல்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சி இச் சட்டத் திருத்தத்தை கடுமையாக எதிர்க்கிறது. சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள். ஜனநாயகத்திற்கு விரோதமாக கொண்டு வரப்பட்டுள்ள இச் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும்' என்றார்.

இப்போராட்டத்தில் மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், நிர்வாகிகள் வானுமாமலை, முரளிராஜா, சொக்கலிங்ககுமார் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.