அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பேரணி அல்ல; போர் அணி: மு.க. ஸ்டாலின் பேச்சு

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னையில் திமுக கூட்டணி சார்பில் நடைபெற்றது பேரணி அல்ல, போர் அணி என்று பேரணியின் நிறைவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

News image
திமுக தலைவர் ஸ்டாலின்
Updated On :23 டிசம்பர் 2019, 6:42 am

DIN


சென்னை : குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னையில் திமுக கூட்டணி சார்பில் நடைபெற்றது பேரணி அல்ல, போர் அணி என்று பேரணியின் நிறைவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் இன்று காலை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கிய பேரணி, சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவு பெற்றது.

இந்தப் பேரணியில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ, காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடக் கட்சித் தலைவர் கி. வீரமணி, எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் திரண்டிருந்த மக்கள் முன்னிலையில் பேசிய மு.க. ஸ்டாலின், இந்த பேரணி ஒட்டுமொத்த சென்னையையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. திமுகவின் போராட்டம் என்பது சமத்துவத்திற்கான போராட்டம் - சகோதரத்துவத்துக்கான போராட்டம் - ஜனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டம் - நீதிக்கான போராட்டம்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்றது பேரணி அல்ல; போர் அணி. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை திமுக கூட்டணி கட்சிகளின் போராட்டம் தொடரும்.

மதத்தால் மக்களைப் பிளவுபடுத்தும் குடியுரிமைச் சட்டத்தை நாம் எதிர்க்காமல் இருக்க முடியுமா? இனத்தால் ஒன்றான தமிழர்களைப் பிரிப்பது எப்படி நல்ல சட்டமாக அமைந்திட முடியும்?" என்றும் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.