மதுரையில் கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டம்

மதுரை மாவட்டம் மகபூப்பாளையம் ஜின்னா திடலில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.
மதுரையில் கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டம்
Updated on
1 min read

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது.

இந்நிலையில், மதுரை மாவட்டம் மகபூப்பாளையம் ஜின்னா திடலில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள், மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து சமுதாயத்தினர் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது. 500 பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com