நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆம்பூர் அருகே 3வது நாளாக வயல்வெளியில் புகுந்த யானைக்கூட்டம்

ஆம்பூர் அருகே மிட்டாளம், மேல்மிட்டாளம், பந்தேரப்பல்லி பகுதி விவசாய நிலங்களில்  காட்டு யானைக் கூட்டம் புகுந்ததால் நெல், வாழை, மா பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. 

News image
Updated On :25 டிசம்பர் 2019, 10:59 am

DIN

ஆம்பூர் அருகே மிட்டாளம், மேல்மிட்டாளம், பந்தேரப்பல்லி பகுதி விவசாய நிலங்களில்  காட்டு யானைக் கூட்டம் புகுந்ததால் நெல், வாழை, மா பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி பந்தேரப்பள்ளி கிராமத்தில் பிரபல கன்னட நடிகர் நவரசன் நிலத்தில் புகுந்த யானைகள், அங்கிருந்த சுமார் 3 ஏக்கர் நிலத்தில் அறுவடைக்காக தயாராக இருந்த  நெல் பயிர்களை சேதப்படுத்தின.

Story image

வனத்துறையினர், ஊர் பொதுமக்கள் உள்பட சுமார் 50 பேர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சுமார் 2 மணி வரை போராடி யானைக் கூட்டத்தை காட்டுக்குள் விரட்டினர். உதவி வன பாதுகாவலர் ராஜ்குமார்  மற்றும் வனத்துறையினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் யானைக் கூட்டம் ஊருக்குள் வரவிடாமல் தடுக்க ஆலோசனை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.