நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஓசூர் சட்டப்பேரவைத் தொகுதி காலி என்று அறிவிக்க கோரி ஆளுநர், சபாநாயகருக்கு ஸ்டாலின் கடிதம் 

ஓசூர் தொகுதி காலி என்று அறிவிக்க கோரி ஆளுநர், சபாநாயகருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

News image
Updated On :8 பிப்ரவரி 2019, 6:08 pm IST

சென்னை: ஓசூர் தொகுதி காலி என்று அறிவிக்க கோரி ஆளுநர், சபாநாயகருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ஓசூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் பாலகிருஷ்ணா ரெட்டி. கலவரம் ஒன்றில் பங்கேற்று பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில், சிறப்பு நீதிமன்றம்  அவருக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை வழங்கியது. இதையடுத்து அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிபோனது.

எனவே ஓசூர் சட்டப்பேரவைத் தொகுதி காலி என்று அறிவிக்கக் கோரி பல்வேறு தரப்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டது. ஆனால் இதுவரை சபாநாயகர் அதனை காலி என்று அறிவிக்கவில்லை.

இந்நிலையில் ஓசூர் தொகுதி காலி என்று அறிவிக்க கோரி ஆளுநர், சபாநாயகருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சபாநாயகர் தனபால் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் அரோரா ஆகியாருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஓசூர் தொகுதியை காலி என்று அறிவிக்க சபாநாயகர் தனபால் இதுவரை எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.