மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மற்றவர்களைக் குறை சொல்லியே  ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர்: தொண்டர்களை அதிர வைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 

மற்றவர்களைக் குறை சொல்லியே  எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்ததாக, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்  பேசியது தொண்டர்களை அதிர வைத்துள்ளது.

News image
Updated On :11 பிப்ரவரி 2019, 2:38 pm

ஒட்டன்சத்திரம்: மற்றவர்களைக் குறை சொல்லியே  எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்ததாக, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்  பேசியது தொண்டர்களை அதிர வைத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிறன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் வினய் தலைமை வகித்தார். விழாவில் கலந்து கொண்டு தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:

தமிழக பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 28 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது எதற்காக என்றால்   கல்வியில் தமிழகம் சிறந்த மாநிலமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

மற்றவர்களைக் குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் எம்.ஜி.ஆர். ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த 500 ரூபாய்க்கு கறவை மாடு இலவசமாக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

அவரது இந்த பேச்சானது பொதுமக்கள் மத்தியி்ல் சலசலப்பை உண்டாக்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.