குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மின் திருட்டு: தனியார் ஆலைக்கு ரூ.95 லட்சம் அபராதம்

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருகே மின் திருட்டில் ஈடுபட்ட தனியார் ஐஸ் ஆலைக்கு மின்வாரியம் ரூ. 1 கோடி அபராதம் விதித்துள்ளது.

Updated On :26 பிப்ரவரி 2019, 12:50 am IST


தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருகே மின் திருட்டில் ஈடுபட்ட தனியார் ஐஸ் ஆலைக்கு மின்வாரியம் ரூ. 1 கோடி அபராதம் விதித்துள்ளது.
குலசேகரன்பட்டினம்-திருச்செந்தூர் சாலையில் கல்லாமொழி அருகே ஐஸ் ஆலை உள்ளது.
தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் கயஸ் மகன் ஜெயப்பிரகாஷ் இந்த ஆலையை நடத்தி வருகிறார். 
இந்த ஆலைக்கு தமிழ்நாடு மின்வாரியத்தில் இருந்து 2 மின் இணைப்புகள் பெற்றுள்ளார். இந்த இணைப்புகளுக்கு மின் கட்டணம் மிகக் குறைவாக வருவதாக மின்வாரிய அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மதுரை கோட்ட மின்வாரிய அமலாக்கத் துறை செயற்பொறியாளர் சின்னச்சாமி தலைமையில், விருதுநகர் அமலாக்கத் துறை உதவிச் செயற்பொறியாளர் உதுமான் அலி, திருச்செந்தூர் மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் பிரபாகரன் உள்ளிட்ட 15 அதிகாரிகள், 2 குழுவாக ஆலையில் சோதனை நடத்தினர்.
திங்கள்கிழமை அதிகாலை 1 மணி முதல் 4 மணி வரை சோதனை நடைபெற்றது. இதில், இந்த ஆலைக்கு மின்கம்பத்தில் இருந்து வரும் 2 மின் இணைப்புகள் மின் மீட்டருக்கு செல்லாமல், ப்யூஸ் கேரியர் நீக்கப்பட்டு, ஆலைக்கு நேரடியாகச் சென்றது தெரியவந்துள்ளது. 
இதனால், மின்சாரம் பயன்படுத்துவது அளவீட்டு இயந்திரத்தில் பதிவாகாமல் குறைந்த அளவே மின்கட்டணம் வந்ததும், இதன்மூலம் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, ஐஸ் ஆலைக்கு ரூ. 95,15,923 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்தவில்லையென்றால் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.