டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மதுரைக்காரன் என்றாலே அரிவாளும் கஞ்சாவும்தானா?: அங்கலாய்த்த அமைச்சர் 

தமிழ் சினிமாவில் மதுரைக்காரன் என்றாலே கஞ்சா கசக்குவது, அரிவாள் எடுப்பது என்று தவறாக சித்தரிக்கின்றனர் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு வருத்தம் தெரிவித்துளார். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 6:48 am

DIN

மதுரை: தமிழ் சினிமாவில் மதுரைக்காரன் என்றாலே கஞ்சா கசக்குவது, அரிவாள் எடுப்பது என்று தவறாக சித்தரிக்கின்றனர் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு வருத்தம் தெரிவித்துளார். 

ஞாயிறன்று மதுரையில் தனியார் அமைப்பு ஒன்றின் சார்பில் சார்பில் மாரத்தான் போட்டி  நடத்தப்பட்டது. இந்த ட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு பரிசுகளை வழங்கினார் . நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

அதிமுக அரசின் முயற்சியால் விளையாட்டுத்துறையில் 8-ம் இடத்தில் இருந்த தமிழகம் இன்று 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. மாணவர்கள் தோல்வியைக் கண்டு பயப்படாமல் ஓடினால் வாழ்க்கையில் நிறைய சாதிக்கலாம். மாரத்தான் போட்டியில் சிறுவர் - சிறுமிகள் பங்கேற்பதன் மூலம் அவர்களிடையே நட்பு, அன்பு, பாசம், உற்சாகம் மேம்படும்.

நமது மதுரை மாநகரமானது தொன்மை மற்றும் பாரம்பரியமிக்க நகரமாக மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. ஆனார் தமிழ் சினிமாவில் மதுரைக்காரன் என்றாலே கஞ்சா கசக்குவது, அரிவாள் எடுப்பது என்று தவறாக சித்தரிக்கின்றனர். 

அடிப்படையில் மதுரைக்காரர்கள் பாசக்காரர்கள். அவர்கள் பாசத்திற்காக எதையும் செய்வார்கள். 

இவ்வாறு அமைச்சர் பேசினார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.