ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பசுபதி பாண்டியன் நினைவு தினம்: தூத்துக்குடியில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு 144 தடை  

பசுபதி பாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் 11ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2019, 11:19 am

DIN

சென்னை: பசுபதி பாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் 11ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவராக இருந்தவரான மறைந்த பசுபதி பாண்டியனின் நினைவு தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழன்று (ஜன.10) அனுசரிக்கப்படுகிறது. 

இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருக்க மாவட்ட காவல்துறை இன்று மாலை முதல் 11ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவுப் பிறப்பித்துள்ளது. 

இதையடுத்து, பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கும், ஜோதி எடுத்து வருவதற்கும், ஊர்வலம் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வாகனங்களில் ஆட்களை ஏற்றி வருவதற்கும், அன்னதானம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இந்த அத்தடை உத்தரவில் இருந்து பள்ளி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள், பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் ஆகியவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.