கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

போகியை நினைத்து பயப்படும் சென்னை விமான நிலையம்: முன்னேற்பாடுகள் தீவிரம்

பனி மூட்டம் காரணமாக ஏற்கனவே காலை வேளைகளில் விமான நிலையத்தின் ஓடுபாதையில் குறைந்த தூரத்துக்கே தெளிவாக பார்க்கும் நிலை இருந்து வருகிறது.

News image
Updated On :12 ஜனவரி 2019, 9:04 am


சென்னை: பனி மூட்டம் காரணமாக ஏற்கனவே காலை வேளைகளில் விமான நிலையத்தின் ஓடுபாதையில் குறைந்த தூரத்துக்கே தெளிவாக பார்க்கும் நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில் வரும் திங்கட்கிழமை போகிப் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ளதை நினைத்து, விமான நிலைய அதிகாரிகள் அச்சத்தில் உள்ளனர்.

கடந்த ஆண்டு போகிப் பண்டிகையின் போது காலையில் இயக்கப்படும் 16 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. 42 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன. 40க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்த ஆண்டும் அந்த நிலை ஏற்படக் கூடாது என்பதால், காலையில் இயக்கப்படும் விமானங்களின் நேரத்தை ஒரு சில நாட்களுக்கு மாற்றியமைக்கும் திட்டத்தில் விமான நிலைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்களிடம் போகிப் பண்டிகையின் போது விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை விமான நிலையம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.