யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கின்னஸ் சாதனை நிகழ்வான விராலிமலை ஜல்லிக்கட்டு: மாடுகள் முட்டி இருவர் சாவு 

கின்னஸ் சாதனை நிகழ்வாக நடைபெற்ற விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டியதால் இருவர் பலியாகினர்.

News image
Updated On :20 ஜனவரி 2019, 2:10 pm

DIN

விராலிமலை: கின்னஸ் சாதனை நிகழ்வாக நடைபெற்ற விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டியதால் இருவர் பலியாகினர். 

விராலிமலையில் 2 ஆயிரம் காளைகள் பங்கேற்கும் கின்னஸ் சாதனை முயற்சி ஜல்லிக்கட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உலக சாதனை முயற்சியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஜல்லிக்கட்டை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தனர். காலை 8 மணிக்கு தொடங்கப்பட்ட இந்த ஜல்லிக்கட்டில் முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 

2 ஆயிரம் காளைகள் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்றன. வெற்றி பெறுவோருக்கு சிறப்புப் பரிசுகளாக கார்கள், மோட்டார் சைக்கிள்கள், மிதிவண்டிகள், தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள், பீரோ, கட்டில், கிரைண்டர், குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருள்களும் வழங்கப்பட்டன. 

இதுவரை நடைபெற்ற ஜல்லிக்கட்டை விடவும் அதிக எண்ணிக்கையில் காளைகளும், மாடுபிடி வீரர்களும், பரிசுகளும் வழங்கப்பட்டதால், இது உலக சாதனைப் பட்டியலில் இடம்பெறவுள்ளது.  இதற்காக லண்டனில் இருந்து இருவர் பார்வையாளர்களாகப் பங்கேற்றுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 518 வாடிவாசல்கள் உள்ளதாகவும், வேறெந்த மாவட்டத்திலும் இதுபோன்ற ஜல்லிக்கட்டு விழாவுக்கான வாடிவாசல்கள் இந்த எண்ணிக்கையில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டியதால் இருவர் பலியாகினர். 

ஜல்லிக்கட்டில் காளை பாய்ந்து மணப்பாறை சொரியம்பட்டியை சேர்ந்த 35 வயதாகும் ராமு என்பவர் பலியானர். அதேபோல மாடு முட்டியதால், திருச்சி மாவட்டம் ஜீயபுரம் எனும் ஊரைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 43) என்பவரை சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.