தமிழகத்தில் நீர்நிலைகள் நாளுக்கு நாள் ஆக்கிரமிக்கப்பட்டு, வீடுகள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதனால், மழைநீர் சேகரிக்க முடியாமல் நிலத்தடி நீர் படுபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. எனவே, நீர்நிலைகளில் உள்ள கட்டடங்களுக்கு பத்திரப்பதிவு செய்யக்கூடாது, மின் இணைப்பு வழங்கக்கூடாது, உள்ளாட்சி அனுமதியுடன் வரைபட அனுமதி அளிக்கக்கூடாது, ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு வரி வசூலிக்கக்கூடாது, ஆக்கிரமிப்பு கட்டட உரிமையாளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கக்கூடாது, அரசின் நலத் திட்ட உதவிகளையும் வழங்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.