பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

சென்னையில் ட்ரை வாஷ் முறைக்கு மாறும் ராயல் என்ஃபீல்ட்: எவ்வளவு தண்ணீர் மிச்சமாகும்?

புகழ்பெற்ற மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனமான ராயல் என்ஃபீல்ட், சென்னையில் உள்ள அனைத்து சர்வீஸ் மையங்களிலும் இன்று முதல் ட்ரை வாஷ் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

News image
Updated On :26 ஜூன் 2019, 10:51 am

PTI


சென்னை: புகழ்பெற்ற மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனமான ராயல் என்ஃபீல்ட், சென்னையில் உள்ள அனைத்து சர்வீஸ் மையங்களிலும் இன்று முதல் ட்ரை வாஷ் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள அனைத்து சர்வீஸ் மையங்களிலும், சர்வீஸுக்கு வரும் வாகனங்களை தண்ணீர் இல்லாமல் (மிகக் குறைந்த தண்ணீரில்) ட்ரை வாஷ் முறையில் சுத்தப்படுத்தும் முறையை அறிமுகப்படுத்தியிருப்பதால் சுமார் 18 லட்சம் லிட்டர் தண்ணீர் மிச்சமாகுமாம் ஒவ்வொரு மாதமும். 

பல காலமாக இது தொடர்பாக சோதனை செய்து, மிக முக்கியமான ஒரு விஷயத்தை செயல்படுத்தியிருப்பதாகவும், அதே சமயம், வாடிக்கையாளர்களின் திருப்தியில் எந்த சமரசமும் செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தால், முதல் முறையாக சென்னையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. படிப்படியாக இது தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.