மழை நீர் சேமிப்புத் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மும்பையில் நடைபெற்று வந்த தர்பார் படப்பிடிப்பில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
ரஜினி மக்கள் மன்றம் சார்பில் குடிநீர் விநியோகிக்கப்படுவது நல்ல விஷயம். அவர்களை மனமார பாராட்டி, வாழ்த்துகிறேன். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க மழைநீரை சேகரிக்க வேண்டியது மிக அவசியம். ஏரிகள், குளங்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும்.
தமிழக அரசு மழை நீர் சேமிப்புத் திட்டத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க முடியாதது நிச்சயமாக வருத்தமளிக்கிறது. சரியான நேரத்தில் தபால் வாக்கு வந்து சேராத காரணத்தால் வாக்களிக்க இயலவில்லை என்று தெரிவித்தார்.