சென்னை: ஈபிஎஸ், ஓபிஎஸ் மீது வைத்த குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற மாட்டேன் என்று அதிமுகவில் மீண்டும் இணைந்த கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி காவிரி விவகாரத்தில் பாஜகவை விமர்சித்ததால் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் அதிமுகவில் இன்று மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் அவர் அதிமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் ஈபிஎஸ், ஓபிஎஸ் மீது வைத்த குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற மாட்டேன் என்று அதிமுகவில் மீண்டும் இணைந்த கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.சி.பழனிசாமி கூறியதாவது:
காலங்கள் மாறுவதைப்போல கட்சியின் தலைமைகள் மாறும். தேர்தல் காலத்தில் மனவேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஒன்றாக பணியாற்ற வேண்டும்.
தேர்தலில் அதிமுக வெற்றிக்காக பணியாற்ற வேண்டியது கடமை என்பதால்இணைந்து பணியாற்றுகிறேன்
நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட விருப்பமனு அளிக்கவில்லை, நான் போட்டியிட மாட்டேன்
முன்னர் ஈபிஎஸ்,ஓபிஎஸ் மீது வைத்த குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறமாட்டேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


